புதன், 4 ஜூன், 2014

Comments on Badaun [UP] gang rape!

இந்திய தேசிய தலித் தலைவர் என்பதாக அனைத்துத்  தலித்துக்க
ளாலும் போற்றப் படுகிறவர் ராம் விலாஸ் பஸ்வான்.  மந்திரிப் பதவியை அடையவே இப்போதைக்கு தலித் சேனாவைப் பயன்படுத்த முடியும் எனும்படிக்கு  அவருடைய நம்பிக்கை.

தலித் மக்களை மட்டுமே நம்பினால் செல்வி மாயாவதி UP க்கு முதல்வர் ஆக முடியாது என்பது அவருக்கு எதிராக தற்போதைய நிலவரப்படி உள்ள கொடுமை.

தென்மாநிலங்களில் தலித் மக்கள் இயக்கங்கள் அறிந்த ஓர் தலைவர் தொல் திருமாவளவன் தலித் மக்கள் முன்னேற்றத்துக்காக திருமணம் கூட செய்ய மறுக்கின்ற துடிப்பு மிக்க இளைஞர்!

இம்மூன்ன்று தலைவர்களை மக்கள் புரிந்து நாடு முழுவதும் ஒரே கட்சியாக இணைந்து செயற்ப்பட முடியாதபடி  தடைகளை ஏற்ப்படுத்தும் குட்டிக் குட்டி கட்சிகளாய் செயற்படும் சாதி உட்பிரிவுகளின் தலைவர்கள்.

அவ்வாறு தலித் மக்களிடையே உள்ள
சாதி உட்பிரிவுகளின் சிறுசிறு தலைவர்கள் தங்கள் கடமை உணர்ந்து வாரிசுகளின் நலனுக்காக அகில இந்தியா அளவில் ஒரே தலித் இயக்கமாக செயற்பட இணங்கி இணைந்திடும்போது...

இம்மூன்று தலித்தலைவர்களும்
பாராளும் மன்ற தலித் உறுப்பினர் களை இந்து மதம் விலகி வெளியே வாருங்கள் இந்தியாவில் மண்ணின் மைந்தர் தேசிய அரசு காண்போம் என்று அழைக்கின்ற சூழ் நிலைக்கு ஒன்றுப்பட வேண்டும்.

அப்போது தலித் மக்கள் அனைவரும் தேசிய அளவில் ஓர் அணியாய் திரள்வார்கள்.  இந்து மதம் விலகி
மறைந்த அறிவுலக மேதை பெரும்
தலைவர் டாக்டர் அம்பேத்கர் வழியில்
தாய் மதத்திற்குக் [பெளத்தத்திற்கு] மாறுவார்கள்.  தலித் பாராளும் மன்ற உறுப்பினர்கள் தலித் தலைவர்க ளின் சொற்களுக்கு கட்டுப்படு வார்கள்.

அப்படி ஓர் நிலவரம்உருவாகுமானால் காங்கிரஸ் புதிதாக மண்ணின் மைந்தர் தேசிய அரசு அமைய உதவும்.   இந்திய முஸ்லிம்கள் கிருஸ்தவர்கள்  தலித் மக்களிடம் எப்போதும் அவர்கள் பாச உணர்வுகளுடன்  இருந்திடும் நிலைமையால் புதிய அரசோடு அன்பால் இணைவர்.  பகுத்தறிவு கதிரவன்  பெரியாரின் தொண்டர்கள் உண்மையான  திராவிடர்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் புதிய அரசு சிறப்புற உதவும்.

இரண்டாவது வாய்ப்பாக தனித் தெலுங்கானா அமைந்துற்றது போல் 
அகில இந்திய அளவில் தலித் மக்கள் ஒரே கட்சியாக இணைந்து போராடிட தாழ்த்தப்பட்வர்கட்காக தனி மாநிலம் காண்பது எளிது.

இவ்விரண்டு செயல்திட்டங்களில் ஒன்றாவது வெற்றி அடைந்திடாத நிலைமையில் தாழ்த்தப் பட்டவர்கட்கு  எதிராக வன்கொடுமை களும் உடலுறவு ஒழுக்கம் கெடுப்புக்களும் நாடு முழுவதும் நிகழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக