பக்கங்கள்

பக்கங்கள்

வெள்ளி, 1 மே, 2015

சத்தியமே! சொல்... பொதுவுடமை, பித்தரைப் பின்பற்ற தோன்றா!






சித்தார்த்தன் செய்தாற்போல் சீர்திருத்து  பாரதத்தை,
எத்தனைநாள் பேதவம்சம் ஏய்க்கும்!

அத்தனைக்கும் காரணம் ஆண்டவன்தான் என்றிருக்க,
எத்தனைநாள் ஏமாறும் மேநாள்!

துர்மத சலத்துள்ளே தோன்றிட்ட பேத கொசுக்க ளாலே,
வர்ணசாக் கடைப்புழுக்கள் வாழும் சாதி ஈக்க ளாலே,
சாதி மோதல் கால ராக்ககள் சமய சண்டை சீத பேதி;
வீதி வீதி வேற்றுமை; மலேரி யாக்கள் தோன்றிற்றே!

படைத்தவன் பைத்தியம் பாருள் அகலாமல்;
அடைந்திடு மோ
புதுமை அண்டம்; அறிவியலால்,
மூடக்கருத்துக்கள் மூவாயிரம் நீகண்டும்,
சாடிஒழிக் காமல் தவிர்ப்பதும் மூடமே!
சத்தியமாய் சொல்வேன் சகத்துள் பொதுவுடமை...
பித்தரைப் பின்பற்ற
தோன்றா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக