ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

ஈரோட்டு பகுத்தறிவுச் சிங்கம் பெரியார்... எரித்திட்டது...


    வ​ரைப்படம்:  Prakash JP


கடவுள் கதையாவும் கற்பனையே எனநம்பாமல்;
அடகண்டது ஆலயத்தில் உண்டிட சீரணம்ஆகாமல்;
உடலம் கொழுப்பு உருகுதற்கு கோயிலோ, குளமோ,
மடமோ சுற்றுகின்றான்! மடஅய்யன் அதை பக்தியால்;
திடமொடு அறிவியலைப் பற்றாமல் தினம்தெய்வம்...
மடமையில் உண்டெண்றான் மதியால் ஆயாமலே!

ஈரோட்டு பகுத்தறிவு மாமேதை பெரியார்...
எரித்திட்டது கம்பனின்

இரமன் கடவுள் என்பதாய்...
கற்பனை செய்திட்ட மாசுறையை!
இராமயணத்தை அல்ல; அது... ஏனென்றால் கதை!

உடைத்திட்டது முதலாம் அன்னியனின்...
மானுட பேத ஓதல்களை!
பிதற்றிட்ட பிள்ளையாரை அல்ல;
அது... ஏனென்றால்,  

கடவுள் இல்லவே இல்லை!

அதனால் ஏன் சில சோம்பேறிகளை...
சோகம் சுரண்டிட்டதாம்?
அவாளின் பக்தியிலே பருப்புக்கள்...
[பல] வேகாமலே வெளி யேறிட்ட னவாம் ?

ஏன்
அவ்வாறு பருப்புக்கள்...
கூடு விட்டுக் கூடு மாறிட்ட
டனவாம்?
உப்பு​வெங்காயம் விலை....
கடவுள் கட்டுப்பாட்டை மீறி ஏறிட்டதாம்?

அதற்கு பெரியார் என்ன செய்வாராம்?
இவர் தப்புச் செய்திட்டாராம்!
என்ன தப்புச் செய்தாராம்?


கம்பனின் உளரல்படி, குரங்குகட்கு...

ஆண்மை இல்லை என்றாராம்!

போர்ஆன ஆதி கற்பனை கசாயங்கள்படிக்கு...
கடவுள்கட்கு மான உணர்வு...

 
ஏக அலை அவனைப் போல்,
இராவணன், இரண்யணைப் போல்;
துரியோதனன், கர்ணனைப் போல்...
இல்லை என்றாராம்;


அமெரிக்காவில் மட்டும் அல்ல...

ஓரினச் சேர்க்கை!
இந்திய இந்து கடவுள்கட்கு இடையேயும்...
இருந்திட்டது! என்றாராம்


கற்போடு கடவுளச்சிகளை...
காணவில்லை என்றாராம்!

புராணப் புளுகுகளில் உள்ளவற்றைத்தானே...
எடுத்துரைத்தார்! 
இவை எப்படி தப்பு ஆயிற்றாம்?
 
குரங்குகளாய் இருந்திட்டவன்... 
மனிதன் ஆகிவிட்டானாம்!
மானுடத்துள் பெரும்பாலேர்க்கு அறிவியல்...
அடிப்படையில் பகுத்தறிவு வந்துற்றதாம்!

அவர்கட்கு பகுத்தறிவு வந்துற்றதால்...
இவர்கட்கு என்னவாம்?

உழைப்பவன் உழைப்பை...

[தான், சுரண்டும்நரி வஞ்சக அறிவை;
(தன்தந்திரமாக்கி
அந்தப்படிக்கு,
men
திறத்தை, மந்(மண்)திறமாக்கி;
என் (முன்னோர்) திறத்தை எந்திரமாக்கி]...

இவர்கள் கற்களுக்கு முன் நின்று மணியடித்து...
பிழைத்திடும் சுரண்டல் பிழைப்பில் மண்...
விழுந்திட்டதாம்!!

அன்று ஈரோட்டு பகுத்தறிவுப் பகலவன்...
எதிர்த்திட்டது ஏமாளிகளை அல்ல;
கோமாளிகளை!

 
கண்டித்திட்டது கோமாளிகளை அல்ல;
ஏமாளிகளை!

இதில் சில காலி பெருங்காய டப்பாக்கள்
முணுமுணுத்திட்டன! எதனாலாம்?

தேர்இழுத்திட்ட பல அடிமை  மனிதர்கள்!
மதம் மாறிட்டனாறாம்!

ஈரோடு பெருமையுற்றதாம்! ஏனாம்?
அதில் வெங்காயங்கள் 

புகழுற்றனவாம்!

ஊழையிடும் சாதிநரிகள் இன்னமும்...
தெளிவுப்படுத்திக் கொள்ளவிலலை!
அம்பேத்காரின் சுர(வைக்கும்)சிம்மங்கள...
பெரியாரின் கருஞ்சிறுத்தைகள்!
ஓய்வாய் உலாவுகின்றன என்று

[அதனால்]...

கடவுள் கதையாவும் கற்பனையே எனநம்பாமல்;
அடகண்டது ஆலயத்தில் உண்டிட சீரணம்ஆகாமல்;
உடலம் கொழுப்பு உருகுதற்கு கோயிலோ, குளமோ;
மடமோ சுற்றுகின்றான்! மடஅய்யன் அதை பக்தியால்;
திடமொடு அறிவியலைப் பற்றாமல் தினம்தெய்வம்...
மடமையில் உண்டெண்றான் மதியால் ஆயாமலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக