திங்கள், 2 பிப்ரவரி, 2015

சிந்துநதி பள்ளத்தாக்குகளில் நுழைந்த ஆண்டி நாத்திகம் தீண்டி ...


புகைப் படம்:  Maalaimalar Tamil மாலைமலர் தமிழ்


மண்ணின் மைந்தன் பரதன் ஆண்ட மண்ணில்...
'ஆரிய அந்நிய போலி மதவாதம்'!?
விண்ணைத் தொட்டிடும்...
இமயமலைத் தாண்டி...!

சந்தாய் நீள... கைபர் போலன், 
கணவாய்கள் வழி ஊடுருவி வந்து;
சிந்துநதி பள்ளத்தாக்குகளில் [அத்துமீறி]
நுழைந்த ஆண்டி... முதலாம் அந்நியன்!

உண்மையில் அவனெல்லாம்;
நாத்திகம் தீண்டி ...
[வெறும் பொம்மைகளை,
தெய்வம்  என்று காட்டி]

பேதம்ஓதி நாளும் செப்பிட்டான்! [அவனுக்கு]
கடவுளும்  கட்டுபபட்டவன் என்று; 
அதனால் ஆண்டவனும் அந்தப் பரதேசியின்...
போலி அடிமையாய் ஆகிட்டான்!

இன்றோ...
மதச்சார்பின்மையை அழித்திட; 
குரங்குப்படையை தூண்டி; [இந்திய]
மண்ணின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக; 

அரசமைப்பு சாசனத்தைப் புறக்கணித்து...
தீவிர வாதிகளையும் மீறத் துணிந்திட்டான் !