வியாழன், 14 மே, 2015

சாதிமனப் புண்ணடா சாமி சடங்கு சீழடா!

 Photo :  Radoslav Dejanović

தெய்என் றால்கொலை! தெளி... 
     தெய்வம், கொலைசெய் மிருகம்!

இறை,திரை வரியே! இறைவன், 
     வரிவசூல் அதிபதி, அரசன்!

ஆண்டவன் என்பான், இம்மண்... 
     ஆண்டு செத்திட்ட மன்னன்!

கடவம் என்ப​தோ...  நாடு, கேடயம், 
     போர்படை; என்றுஆக...

கடவுளும். வேந்தனே!  இல்லைஎங்கும் 
     நீபறையும் கடவுளே

பொறிப்போல் கொறிக்கவே போடா; உன்தெய்வம்!
அரிக்கும் இலைப்புழுவே! ஆடாதே மேலும்;
எரிமலையைத் தீய்க்க எறியாதே பந்தம்;
வறியோர் வறுமை அகற்று!

ஈன சாதி தோன்றவே இறந்து வாய்மைப் பட்டதே!
ஆனநீதி யாவையும் அழிந்து போக லானதே!
ஊண ஓதல் யாகத்துள்மதி ஊணமுற்ற மனிதனே!
காணநீதி நாட்டுள்ளே கருக வேணும் பேதஅம்ச​மே!

சாதிசொறிப் புண்ணடா  சாமி சடங்கு சீழடா!
ஓதி ஏய்க்கும் ஊழன் இங்குபேத நோய்ப ரப்பும் ஈயடா!
நீதி நேர்மை உயிர்பெற நீயும் நானும் தானடா!

சாதி விலகி ஒன்றிவாழும் சரித்திரத்தை காணடா!

மேலும் படி: 

வெள்ளி, 1 மே, 2015

சத்தியமே! சொல்... பொதுவுடமை, பித்தரைப் பின்பற்ற தோன்றா!






சித்தார்த்தன் செய்தாற்போல் சீர்திருத்து  பாரதத்தை,
எத்தனைநாள் பேதவம்சம் ஏய்க்கும்!

அத்தனைக்கும் காரணம் ஆண்டவன்தான் என்றிருக்க,
எத்தனைநாள் ஏமாறும் மேநாள்!

துர்மத சலத்துள்ளே தோன்றிட்ட பேத கொசுக்க ளாலே,
வர்ணசாக் கடைப்புழுக்கள் வாழும் சாதி ஈக்க ளாலே,
சாதி மோதல் கால ராக்ககள் சமய சண்டை சீத பேதி;
வீதி வீதி வேற்றுமை; மலேரி யாக்கள் தோன்றிற்றே!

படைத்தவன் பைத்தியம் பாருள் அகலாமல்;
அடைந்திடு மோ
புதுமை அண்டம்; அறிவியலால்,
மூடக்கருத்துக்கள் மூவாயிரம் நீகண்டும்,
சாடிஒழிக் காமல் தவிர்ப்பதும் மூடமே!
சத்தியமாய் சொல்வேன் சகத்துள் பொதுவுடமை...
பித்தரைப் பின்பற்ற
தோன்றா!