செவ்வாய், 29 டிசம்பர், 2015

உன்னால் காதல்... வாழ்கை ஆயிற்று!

  
   
Photo:  Christa B. Allen


உன்னிலிருந்து
       அன்பு விதைப்பெற்றேன்!
உன்னிலிருந்து
       காதல் கொடிவளர்த்தேன்!
உன்னிலிருந்து கவிதை -
       மகரந்தங்களை தூவிவிட்​டேன்!
உன்னிலிருந்து கனிகள்மணங்களை
       காற்றில உதிர்த்திட்டேன்

என்னால்நான்
       துணையை விலகிட்டேன்!
என்னால்நான் குடும்பத்தைத்
       தொலைத்திட்டேன்!
என்னால் என்றன்
       உறக்கம் மறித்திட்டது
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்றுகின்றது!

உன்னால் என்றன்
       சிந்தனை முளைவிட்டது!
உன்னால் என்றன்
       கற்பனைகள் விரிந்திட்டன!
உன்னால் என்னுள்
       காவிய கவிதைகள் மணக்கின்றன!
உன்னால் எனக்கு
       காதல், வாழ்கை ஆயிற்று!

என்னால் ​தோழ்வி உனக்கில்​லை!
எனக்​கே என்​னைக் காப்பாற்று!

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

எங்கும் இல்லா இ​றைவ​னை; நாடி நா​டெங்கிலும்...

Embedded image permalink
 



கண்ணன்ஓர் கடவுள் என்றால் அவ​​னொரு

ணையால் மாண்டிட்ட காரணம் ஏன்?


இராமன் என்பவன் றைவன் என்றால்
ஆற்றில் விழுந்துஉயிர் விட்டது ஏன்?                                                 

ஈசன் என்பவன்தெய்வம்தான் என்றால்
எங்கேஅவன்சென்றான் விவரம் றைவீர்

உயிரைக்கொடுத்து உயிரை எடுக்க
எமனாம்! எமனைப் டைத்தவன்  ஆண்டனோ?

கயி​​றைக் ​​கொடுத்துஅக் காலனை அனுப்பிட்ட
தாய்ச்செப்பும் கடவுள் எவனா னாலும் கற்பனையே!

எங்கும் இல்லா றைவனை ஏங்கிக் காணத்தேடியே
எங்கும் இல்லா றைவனைநாடிகோயில் குளங்களே
செல்லுகின்ற மானுடமே! தீண்டும் சாவு நிற்குமோ?
சொல்லுகின்ற கடவுளும்நேரில் காணதோன்றுமோ?

தேடி எங்கும் இல்லா றைவனை
       தேடித்தேடி இருப்பதாக
நாடி நாடெங்கிலும் நாடி கோயில்கள்
       குளங்கள் சுற்றியே!
வாடி வாழ்நாளில் எவனுமே
       தெய்வம் ​​தோன்றக் கண்டதில்லையே!
கோடிகோடிசெத்தும்  ஒருவனும்
       திரும்ப பிறந்ததும் இல்லையே!

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் அவ்ஊழனிடம்...



 
   பு​கைப்படம்:  Dinakaran Tamil News


இறைவன் ஆரியன் செய்திடும் தவபூசைகட்கு  -
இரங்குவா னாமே!

பறையும்அவன் மந்திரங் கட்கு படைத்தவன்  -

கட்டுப் படுகிறவனாமே!

உரையேன் வானின்று உதித்திட்டதாய்  

ஏமாற்றும் அவ்ஊழனிடம்;

நிறையமழை பெய்திட்டது;  நினைத்ததும்  -

நிற்குமாறு ஓது என்றே!

தீவிரவாதிகளே! 129 உயிர்கள் நீங்கள் நம்புகிற கடவுளால் தரப்படவில்லையோ?



 
  உயி​ரோவியம்:     Elsa Lo Monaco


பூமியை உடைக்க -

மத ஆதிக்க வெறி அன்ன

கடல் கொந்தளித்திட்டது!


சூறாவளியை கிளப்பிவிட்டு

பூகம்பம்
பதுங்கிக்கொண்டது!



வாழ்க்கைப் புயலைக் கடக்க;

பயணிகளின் கப்பல்கள்...

கரையை தொட முற்பட;

எங்கிருந்தோ ஒர் தீப்பிளம்பு...



உலகமே!

உன் முகம் எப்போது...

மடையர்களின் போர்களமாகிற்று?



உன்னை பிளக்க வெளிப்படும் -

மதநிற பேத நச்சு விதைகளை;

உன்னுள் ஊன்றிச் சென்றவன் எவன்?



வெறியர்களே!

காமத்தை விட மோசமானதோ...

உங்கள் கண்களை மறைக்கும்;

மண்ணை அபகரிப்புச் செய்திடும் -

தீவிர வாதம்?



தீவிரவாதிகளே!

நீங்கள் சார்ந்த மதத்திற்கு

ஆதாரம் -

கடவுள் நம்பிக்கைதானே!


உங்கள் கடவுளின் மீதான
நம்பிக்கை
​பொய்யானது அல்லவே?

அய்யகோ!
இது என்ன கொடுமை...
தரணி ஒற்றுமைக்கு நீங்கள்
இப்படித்தான் -
தையல் போடுவீர்களோ?

கிராதகர்களே!
பிரஞ்சு நாட்டுக்குள்  குண்டுவீசி
கொன்ற 129 உலக உயிர்கள் -
நீங்கள் நம்புகிற
கடவுளால் தரப்படவில்லையோ?  

குண்டு வீச்சுக்குள் அதிர்ந்த -
இளம் தளிர்களே! இந்த வடுக்கள்!
மாறாததல்ல!
உங்கள் முகங்களில் எதற்கு -
சிந்தனை கண்ணீர் சுவடுகள்?
நாளை விழி! இன்று உறங்கு?
இது அறிவிலிகளின் ஆணவ விளைவு!

அன்பைத்தாய்  தந்தைக்கும்; ஆசையைத்தா
ரத்திடத்தும்;
பண்பைசேர் நண்பர்கும்; பாடுபடும் உன்னை -
அயலாள் நாம் என்றுரைக்கும்;
ஆணவ-மாய்ப் புக்கும்
உயிரைஉலக  ஒற்றுமைக்கும்  தா!


 
  Photo :  NDTV