திங்கள், 21 ஏப்ரல், 2014

இந்திய அரசமைப்பு சாசனத்துக்குக்  கீழ்படி!

அயலான் யார் என்றால்
அறியாயோ? கைபர்போலன்...
கணவாய் வழிவந்த காட்டு, மிராண்டிகள்தாம்...
ஒண்டவந்த பிடாரி [ஊர் பிட ஏரியை
உடைத்து]  ஊராரை...
விரட்டிட்டாற்போல்;
கடத்துவாயோ இம்மண்ணின்
மைந்தரை?
உன் நிலை உணர்ந்து...
ஒற்றுமை நேசி!
நீயோ முதலாம் அந்நியன்!
இரண்டாம் சுதந்திரப் போர்... கருத்தரிக்க வேண்டாம்!
இந்திய அரசமைப்பு சாசனத்துக்குக்
கீழ்படி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக